மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குபட்பட்ட குருக்கள்மடம் கிராமத்தில் கடற்கரையில் சவுக்குமரங்கள் அதிகளவு செறிந்து நிற்கும் காட்டுப்பகுதியில் இன்று செவ்வாய்கிழமை பிற்பகல் திடீரென தீபரவல் ஏற்பட்டுள்ளது.
இதனால் கடற்கரைப் பகுதியிலுள்ள இயற்கை வனப்பு பகுதி தீயினால் எரிந்து சேதமடைந்துள்ளது.
தகவல் அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்களும், குருக்கள்மடம் இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ வீரர்களும், ஒன்றிணைந்து தீ மேலும் பரவால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
முன்னரும் இவ்வாறானதொரு சம்பவம் ஏற்பட்டிருந்ததாகவும், இந்நிலையில் தீப்பரவல் திட்டமிட்ட சம்பவமா? இதன் சூத்திரதாரிகள் யார் என்பது தொடர்பில் விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.