மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் விபத்து

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்பட்ட மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் குருக்கள்மடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மட்டக்களப்பில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த காருடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக விபத்தினை நேரில் அவதானித்தவர்கள் தெரிவித்தனர்.

விபத்தில் எவருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை. எனினும் முச்சக்கரவண்டியில் பயணம் செய்த இரு பெண்கள் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவிக்கின்றது.

இந்நிலையில் ஸ்தலத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிஸார் விபத்துக்குள்ளான இரு வாகனங்களையும் மீட்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்