மட்டக்களப்பு இந்து கல்லூரியின் நடைபவணி

கிழக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது அரச பாடசாலை மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 78 ஆவது ஆண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில் முதன் முறையாக (Hinduite walk) கின்டுடியுட் வோக் நடைபவனியானது ஒழுங்கு செய்யப்பட்டு இன்று சனிக்கிழமை இடம்பெறுகின்றது.

“ஒன்றிணைவோம் உயர்ந்திடுவோம்” எனும் தொணிப் பொருளில் முன்னெடுக்கப்பட்டுகொண்டிருக்கும் இந்த நடைபவனியில் பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.

இந்த நடைபவனியானது இன்று காலை 8 மணியளவில் மட்/இந்து கல்லூரி பாடசாலையில் இருந்து ஆரம்பமாகி மட்டு நகர் ஊடாக மீண்டு பாடசாலையை வந்தடைந்துள்ளது.

 

 

 

 

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்