போலி இலக்கத்தகடு பொருத்தப்பட்ட ஜீப்: முன்னாள் உப தவிசாளர் கைது

போலி இலக்கத்தகடு பொருத்தப்பட்ட ஜீப் ரக வாகனத்தை வைத்திருந்த குற்றச்சாட்டில் தங்காலை பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் தங்காலை பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த ஜீப் ரக வாகனம் பெலியத்த – புவக்தண்டாவ பகுதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, அரசுக்குச் சொந்தமானது எனச் சந்தேகிக்கப்படும் 3 ஜீப் ரக வாகனங்களும் 2 உந்துருளிகளும் மரதகஹமுல்ல பகுதியிலுள்ள திவினெகும களஞ்சிய கட்டடத்தில் கைவிடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.