பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் நிகழ்வு

-கல்முனை நிருபர்-

களுவாஞ்சிக்குடி பிராந்திய சுகாதார வைத்திய பிரிவில் பாடசாலை மாணவர்களுக்கான கருப்பை கழுத்து புற்று நோயை தடுப்பதற்கான தடுப்பூசி மற்றும் ஏற்புவலி, தொண்டைக்குள் நான் நோய்களை தடுப்பதற்கான தடுப்பூசி ஆகியன ஏற்றும் செயல்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இன்று பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலகம் பிரிவிற்குட்பட்ட கோட்டைக்கல்லாறு மகாவித்தியாலயத்தில், தரம் 01 தரம் 4 தரம் 7 தரம் 10 ஆகியவற்றில் கல்வி கற்கும் மாணவர்களின் தேக ஆரோக்கியம் தொடர்பான மருத்துவ பரிசோதனை நடைபெற்றதுடன், 13 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கு கருப்பை கழுத்து புற்று நோய் தடுப்பூசி ஏற்றப்பட்டது.

அத்துடன் ஏ.ரி.டி தடுப்பூசியும் ஏற்றப்பட்டன. இதில் களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி, பொதுச் சுகாதார பரிசோதகர்கள், குடும்பநல உத்தியோகத்தர்கள் ஈடுபட்டிருந்தனர்.