பலத்த மழை பெய்ய வாய்ப்பு

நாட்டின் பல பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மேல், சபரகமுவ, வடமேல், வடக்கு மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களிலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என குறித்த திணைக்களம் அறிவித்துள்ளது.