தீயுடன் சங்கமமானார் மாவை சேனாதிராஜா

இலங்கை தமிழரசுக் கட்சியின் மறைந்த மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை தகனம் செய்யப்பட்டது.

மாவிட்டபுரத்தில் உள்ள அன்னாரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது பூதவுடல் வைக்கப்பட்டு இன்றைய தினம் இறுதிக்கிரியை நடைபெற்று, மாவிட்டபுரம் இந்துமயானத்தில் அன்னாரது பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

அரசியல் பிரமுகர்கள், பொது அமைப்பினர், மத குருமார்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், என பல்வேறு தரப்பினரும் இறுதி கிரியையில் கலந்து கொண்டனர்.