திருகோணமலை மாவட்ட செயலக தைப்பொங்கல் விழா – 2025

-மூதூர் நிருபர்-

 

திருகோணமலை மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன், தைப்பொங்கல் நிகழ்வானது, நேற்று வெள்ளிக்கிழமை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார தலைமையில் மாவட்ட செயலக வளாகத்தில் இடம்பெற்றது.

மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன் தலைமையிலான அதிகாரிகள், வயலுக்கு சென்று புதிர் எடுத்தனர், உழவுத் தொழிலின் உன்னத தன்மையை இச்சம்பவம் பறைசாற்றுவதாக அமைய பெற்றிருந்தது.

உழவர்கள் தம் வயலில் விளைந்த நெல்லை முதன் முதலில் சமைத்து உண்ணும் சடங்கு புதிர் எடுத்தல் எனப்படும்.

பூஜை நிகழ்வுகளை, திருகோணமலை ஸ்ரீ பத்ரகாளி அம்பாள் ஆலய ஆதினகர்த்தா வேதாகமமாமணி சிவஸ்ரீ. சோ. இரவிச்சந்திரக் குருக்களின் மகன் கைலாச சங்கர குருக்கள் நிகழ்த்தி வைத்தார்.

இதன்போது கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

மேலும் பொங்கல் விழா நிகழ்ச்சிகளில் பங்கு பற்றிய ஒன்பது பிரதேச செயலக பிரிவுகளிலுமுள்ள அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இப் பொங்கல் விழா நிகழ்வுகள் மிகவும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது அரச உயரதிகாரிகள், மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்