தரையிறங்க முற்பட்ட விமானத்தினால் அருகிலுள்ள வீடுகள் மற்றும் பல உடைமைகள் சேதம்

சிங்கப்பூரில் இருந்து நேற்று புதன் கிழமை காலை கட்டுநாயக விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக வந்த விமானம் திடீரென மீண்டும் மேலே உயத்தப்பட்டதால்  கீழிருந்த வீடுகள் மற்றும் சொத்துகளுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளது.

குறித்த விமானம் மிகவும் தாழ்வான வான்பரப்பில் பறந்தந்ததினால் விமானி பயணிகளின் பாதுகாப்புக் கருதி திடீரென மேல் நோக்கி விமானத்தை உயர்த்தியுள்ளார். இதனால் விமானத்தின் எஞ்சின் வெளியிட்ட அதிக சப்தத்தினாலும், அதனால் தொடர்சியாக வெளியான பலத்த வாய்வுக் காற்றும் அதிர்வும் ஏற்பட்டு தரையில் விமான நிலையம் தொடக்கம்  கடவல மங்கலாராம விகாரை வரையான 5 கிலோமீட்டர் நிலப்பரப்பு பிரதேசத்தினுள் அமைந்துள்ள வீடுகள் சொத்துகளுக்கு அணர்த்தங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விமானத்தினுள் 292 பயணிகளும், 12 விமான ஊழியர்களும் பயணித்ததுடன் இவ் விமானம் (ஒரு எஞ்சின்) 75000 குதிரைவலுசக்தி கொண்ட இரண்டு எஞ்சின்களைக் கொண்ட விமானம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரையிறங்க முற்பட்ட விமானத்தினால் அருகிலுள்ள வீடுகள் மற்றும் பல உடைமைகள் சேதம்

தரையிறங்க முற்பட்ட விமானத்தினால் அருகிலுள்ள வீடுகள் மற்றும் பல உடைமைகள் சேதம்

தரையிறங்க முற்பட்ட விமானத்தினால் அருகிலுள்ள வீடுகள் மற்றும் பல உடைமைகள் சேதம்