
தமிழ் மக்களுக்கு எதிரான வதை முகாம்கள் தொடர்பில் யாரும் பேசுவதில்லை!
பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் கருத்தாடல்கள் தற்போது முன்வைக்கப்படுகின்ற போதிலும், கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற வதை முகாம்கள் தொடர்பில் எவரும் கருத்து தெரிவிப்பதில்லை, என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குற்றஞ்சாட்டினார்.
நாடாளுமன்றத்தில் இன்று சனிக்கிழமை உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சுமார் 219 வதை முகாம்கள் நாட்டில் இருந்துள்ளமைக்கான ஆதாரங்கள் காணப்படுகின்ற போதிலும் அவை தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.
அவை அனைத்தும் பட்டலந்த சம்பவத்துக்குப் பல ஆண்டுகள் பின்னர் இடம்பெற்றுள்ளன.
அத்துடன் பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பிலும் தற்போதைய அரசாங்கம் எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது என எங்களுக்கு நன்கு தெரியும், எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.