சனநாயக தமிழரசு கூட்டமைப்பின் பிரசார கூட்டம்!

3,180

-யாழ் நிருபர்-

சனநாயக தமிழரசு கூட்டமைப்பின் பிரசார கூட்டமானது வட்டுக்கோட்டை தொகுதியில் உள்ள வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வின் ஆரம்பத்தில் மங்கள விளக்கு ஏற்றி வைக்கப்பட்டது, அதனைத் தொடர்ந்து யுத்தத்தில் இன்னுயிர்களை தியாகம் செய்த உறவுகளுக்கு இரண்டு நிமிட அக வணக்கம் செலுத்தப்பட்ட பின்னர் கூட்டம் ஆரம்பமானது.

அதனைத் தொடர்ந்து வேட்பாளர்கள் தமது அறிமுக விளக்க உரைகளை ஆற்றினர்.

சனநாயக தமிழரசு கூட்டமைப்பின் மாம்பழ சின்னத்தில் போட்டியிடும் முதன்மை வேட்பாளரான கே.வி.தவராசா ஆகியோரது உரைகள் இடம்பெற்றன.

ஏனைய வேட்பாளர்களான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், புவனேஸ்வரன் வசந், விமலேஷ்வரி சிறிகாந்தரூபன், குணாளன் கருணாகரன் ஆகியோரும் இந்த பிரசார கூட்டத்தில் இணைந்திருந்தனர்.

Sureshkumar
Srinath