சட்டவிரோதமாக பனை மரங்களை கடத்திச் சென்றவர் கைது!

85

-யாழ் நிருபர்-

 

சட்டவிரோதமாக பனை மரங்களை கடத்திச் சென்ற ஒருவர் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது பனைமரங்களும், அவற்றை கொண்டு செல்வதற்கு பயன்படுத்திய வாகனமும் பொலிஸாரால் மீட்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

அளவெட்டி பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் ஒருவர், காரைநகரில் இருந்து அளவெட்டி பகுதிக்கு பனைமரங்களை கடத்திச் செல்ல முற்பட்டுள்ளார்.

இதன்போது அவர் பொன்னாலை பகுதியில் வைத்து வட்டுக்கோட்டை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்டவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Sureshkumar
Srinath