குஷ் போதைப்பொருளுடன் மூன்று பெண்கள் விமான நிலையத்தில் கைது!

பாங்கொக்கிலிருந்து இலங்கை வந்த மூன்று பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குஷ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 5 கிலோ 248 கிராம் குஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

சந்தேக நபர்கள் 25, 48 மற்றும் 50 வயதான மாளிகாவத்தை மற்றும் வெல்லம்பிட்டிய பகுதிகளில் வசிப்பவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க