
கிழக்கு ஆளுநருடன் எம்.ஏ.சுமந்திரன் கலந்துரையாடல்!
-திருகோணமலை நிருபர்-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், கிழக்கு மாகாண அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுடன் கலந்துரையாடினார்.
திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இன்று திங்கட்கிழமை இந்த சந்திப்பு நடைபெற்றது.