காற்றாலை மின் உற்பத்தி கோபுரம் இடிந்து விழுந்ததில் மூன்று வீடுகள் சேதம்

கற்பிட்டி – கந்தகுளிய பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் காற்றாலை மின் உற்பத்தி கோபுரத்தின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்ததில் மூன்று வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன.

தனியார் மின்சார உற்பத்தி நிறுவனத்திற்குச் சொந்தமான காற்றாலை மின் கோபுரத்தின் ஒரு பகுதியே இவ்வாறு இடிந்து விழுந்துள்ளது.

கோபுரம் இடிந்து விழுந்ததில் ஒரு வீடு முற்றாக சேதமடைந்துள்ளதுடன் அருகிலுள்ள இரண்டு வீடுகள் ஓரளவு சேதமடைந்துள்ளது.

இருப்பினும் மின் கோபுரம் இடிந்து விழுந்த சந்தர்ப்பத்தில் வீடுகளில் யாரும் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.