கடலில் வீசப்பட்ட தங்கக் கட்டிகளை தேடும் பணி ஐந்தாவது நாளாக தொடர்கின்றது

-மன்னார் நிருபர்-

இந்தியாவின் வேதாளை சிங்கி வலை குச்சி மீன்பிடி கிராம கடல் பகுதியில் இலங்கையிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட நிலையில் கடலில் வீசிய கடத்தல் தங்க கட்டிகளை இன்று திங்கட்கிழமை ஐந்தாவது நாளாக தேடி வருகின்றனர்.

கடந்த 4 நாட்களாக மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் தீவிரமாக தேடி வந்த நிலையில் தங்கம் கிடைக்காததால், வட மாநிலத்தில் இருந்து கடலுக்கு அடியில் பொருட்களை தேடும் ஸ்கேனர் கருவி வரவழைக்கப்பட்டு அதன் உதவியுடன் இன்று ஐந்தாவது நாளாக கூபா வீரர்களை கொண்டு கடலுக்கு அடியில் தங்க கட்டிகளை தேடும் பணி தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்