ஐஸ் போதைப் பொருளுடன் விசேட அதிரடிப் படையினரினால் ஒருவர் கைது
-சம்மாந்துறை நிருபர்-
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர் ஒருவரை விசேட அதிரடிப் படையினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 09.00 மணியளவில் கைது செய்துள்ளனர்.
கல்முனைக்குடி பத்தை சேர்ந்த 44 வயதுடைய சந்தேக நபரே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
திருக்கோவில் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதான சந்தேக நபரிடமிருந்து 1 கிராம் 280 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டது.
சந்தேக நபர் சான்றுப் பொருள்களுடன் சட்ட நடவடிக்கைக்காக நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மேலும், இந்த கைது நடவடிக்கையானது திருக்கோயில் விசேட அதிரடிப் படையினரினால் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.