ஐக்கிய நாடுகள் சபையின் பணியாளர் வீட்டில் கொள்ளை

ரத்மலானை பேக்கரி சந்தி பகுதியில் வைத்து கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பு அலுவலகத்தின் ஊழியர் ஒருவரின் வீட்டில் பல கோடி பெறுமதியான சொத்துக்களை திருடிய நபரை மவுண்ட் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த உத்தியோகத்தர் மற்றும் குடும்பத்தினர் எவரும் வீட்டில் இல்லாத போது, ​​சந்தேக நபர் ஜன்னல் வழியாக வீட்டுக்குள் நுழைந்து அவரது வீட்டில் இருந்த பல கோடி மதிப்புள்ள விலைமதிப்பற்ற ரத்தினங்கள், வைரங்கள், முத்துக்கள், தங்கப் பொருட்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்களை திருடிச் சென்றுள்ளார்.

இதனையடுத்து பொலிஸாரின் விசாரணைகளின் பிரகாரம் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.