
எரிபொருள் கப்பல் தொடர்பில் எரிசக்தி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்
நேற்று வியாழக்கிழமை உலை எண்ணெய் மற்றும் பெற்றோலுடனான கப்பல் ஒன்று நாட்டை வந்தடைந்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மேற்படி உலை எண்ணெய் மின் உற்பத்தி நடவடிக்கைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளதுடன், உரிய தரப் சோதனைகளின் பின்னர் இந்த நடவடிக்கைகள் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், வாகன இலக்கத்தட்டின் இறுதி இலக்க முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், தேசிய எரிபொருள் அட்டைக்கான QR குறியீடு சரிபார்ப்பு, பதிவு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.