உள்நாட்டுத் துப்பாக்கியுடன் சந்தேக நபர் கைது
மொனராகலை – பிபில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகல பிரதேசத்தில், உள்நாட்டுத் துப்பாக்கியை வைத்திருந்த சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிபில பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய நபரே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
பிபில பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிபில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.