உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களுக்கு பாதிப்பில்லை

இந்தாண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்களின் விடைத்தாள்களுக்கு அனர்த்தங்களால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

உயர்தரப் பரீட்சையின் அனைத்து விடைத்தாள்களும் தற்போது பாதுகாப்பான இடங்களில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பரீட்சை நடைபெற்ற காலப்பகுதியில் ஒவ்வொரு நாளும் பரீட்சை நிறைவடைந்த பின்னர், அனைத்து விடைத்தாள்களும் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன என்றும் இது பல ஆண்டுகளாக முறையாக நடந்துவரும் ஒரு நடைமுறை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

காலநிலை தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்துடன் தொடர்ச்சியாகக் கலந்துரையாடி, மிகுந்த அவதானத்துடன் செயற்படுவதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.