இரு குழுக்களுக்கிடையில் மோதல்: ஒருவர் உயிரிழப்பு

திருகோணமலை – கோவிலடி பகுதியில் இரு குழுவினருக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தம்பலகாமம், கோவிலடி பகுதியைச் சேர்ந்த கந்தசாமி பேரிம்பராஜா (வயது – 37) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இறந்தவரின் மனைவி வெளிநாட்டில் வேலை செய்வதால் தனது பிள்ளையுடன் மனைவியின் தாயார் வீட்டில் இவர் வசித்து வந்த நிலையில் விருந்து உபசாரத்தின் போது இடம்பெற்ற மோதலில் காயமடைந்து திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து இவர் சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்துள்ளார்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.