ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து ஆகியோர் மேலும் 90 நாட்களுக்கு தடுப்பு காவலில்

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என அடையாளம் காணப்பட்ட நந்துன் சிந்தக எனப்படும்  ‘ஹரக் கட்டா’ மற்றும் குடு சலிந்து ஆகியோரை மேலும் 90 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று வெள்ளிக்கிழமை கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ள ‘ஹரக் கட்டா’ என்ற நந்துன் சிந்தக விக்கிரமரத்னவை உடனடியாக உரிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த 6ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது.