வீதியில் பயணித்துகொண்டிருக்கும்போது திடீரென கழன்று ஓடிய இ.போ.ச பேருந்தின் சக்கரம்

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தின் முன் சக்கரம், நேற்று செவ்வாய் கிழமை கழன்று விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

யட்டியந்தோட்டையில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்த பேருந்தின் சக்கரமே இவ்வாறு கழன்று வீதியில் ஓடி முச்சக்கரவண்டி மற்றும் கணினி பழுதுபார்க்கும் கடைக்கு சேதம் விளைவித்துள்ளது, எனினும் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

கடை உரிமையாளரும் முச்சக்கரவண்டி உரிமையாளரும் கழன்ற சக்கரத்தை யட்டியாந்தோட்டை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதேவேளை, ஏற்பட்ட சேதங்களுக்கு நட்டஈடு வழங்கப்படாமல் பஸ்ஸை அங்கிருந்து செல்லவிடாது தடுத்ததாகவும் கூறிய பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.