
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி கிழக்கு பகுதியில் வீடு ஒன்று தீயில் எரிந்து முழுமையாக சேதமடைந்துள்ளது.
இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
தீ விபத்துக்கான காரணம் என்ன என இதுவரை தெரியவரவில்லை.
உயிர்ச் சேதங்கள் எவையும் ஏற்படவில்லை என்பதுடன், வீட்டில் உள்ள சொத்துக்கள் எரிந்து நாசமாகியுள்ளன.
வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.