விவசாயிகளுக்கு மகிழ்ச்சி

13

நாட்டின் 11 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளின் கணக்கில் உர மானியத்துக்கான பணம் வைப்பில் இடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, ஒரு விவசாயிக்கு 15,000 ரூபா வங்கிக் கணக்கில் வைப்பில் இடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் எம். பி. என். எம். விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இதுவரையில் 11 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளின் கணக்கில் 60 மில்லியன் ரூபா பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அதிகரிக்கப்பட்ட உர மானியத்தை வழங்கும் பணிகள் கடந்த முதல் ஆரம்பிக்கப்பட்டது.

இதனடிப்படையில், முதற்கட்டமாக 15,000 ரூபாவும் இரண்டாம் கட்டமாக 10,000 ரூபாவும் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையிலேயே தற்போது 11 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு இவ்வாறு 15.000 ரூபா வைப்பில் இடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sureshkumar
Srinath