வவுணதீவு பொலிஸார் படுகொலை : புலனாய்வு பிரிவு உத்தியோகத்தர் கைது!

 

வவுணதீவு வலையிறவு பாலத்துக்கு அருகாமையில் இரு பொலிஸாரை துப்பாக்கியால் சுட்டும் வெட்டியும் கொலை செய்த சம்பவத்தில் சரியான முறையில் விசாரணைகளை மேற்கொள்ளாது பிழையான தகவலை வழங்கிய மட்டு கரடியனாறு தேசிய புலனாய்வுத்துறை சேவை பிரிவில் கடமையாற்றிவரும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை சிஜடி யினர் கொழும்பில் வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

கடந்த 2018 நவம்பர் 29 ம் திகதி வவுணதீவு வலையிறவு பொலிஸ் சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொலிஸ் சார்ஜன் நிரோசன் இந்திர பிரசன்னா மற்றும் பொலிஸ் கொஸ்தாபர் டினேஸ் ஆகியோரை இனந்தெரியாதோர் துப்பாக்கியால் சுட்டும். கத்தியால் வெட்டியும் கொலை செய்து அவர்களின் கைது துப்பாக்கிகளையும் எடுத்துச் சென்றனர்

இந்த சம்பவம் தொடர்பாக விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியான அஜந்தன் என்பவர் பாவித்து வந்த ஜக்கட் பாலத்தின் கீழ் வீசி எறிந்து கிடப்பதாகவும். அவர் இந்த படுகொலையை செய்ததாகவும் அறிக்கையிட்டதையடுத்து அவரை பொலிஸார் கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளியை கொழும்பிலுள்ள சிஜடி நான்காம் மாடியில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில். 2019 ஏப்பிரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியான ஜ.எஸ்.ஜ.எஸ் பயங்கரவாத அமைப்பின் ஸஹரானின் குழுவைச் சேர்ந்த கபூர் மாமா என அழைக்கப்படும் ஸஹரானின் சாரதியான முகமது சர்ப் மற்றும் ஆதம்லெப்பை. மில்ஹான். பிறதோஸ். நில்காம் ஆகிய நால்வரை கைது செய்ததன் பின்னர். அவர்கள் தான் இந்த படுகொலையை செய்துள்ளதாக தெரிய வந்ததையடுத்து கைது செய்யப்பட்ட முன்னாள் போராளியான அஜந்தன் விடுதலை செய்யப்பட்டார்

தேசிய மக்கள் சக்தி ஆட்சியை கைப்பற்றியதையடுத்து, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மீண்டும் முன்னெடுத்த நிலையில், பொலிஸார் படுகொலைச் சம்பவத்தின் உண்மை சம்பலத்தை மூடிமறைத்து முன்னாள் போராளி குற்றவாளியாக்கப்பட்டமை கண்டறியப்பட்டது.

இதனுடன் தொடர்புபட்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றிவரும் தேசிய புலனாய்வு சேவையைச் சேர்ந்த இருவரையும் சிஜடி யினர் வரவழைத்து அவர்களிடம் விசாரணையை முன்னெடுத்த நிலையில், மட்டக்களப்பு கரடியனாறு தேசிய புலனாய்வு சேவை பிரிவில் கடமையாற்றிவரும் பொலிஸ் உத்தியோகத்தரை நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்புக்கு வரவழைத்த சிஜடி அவரை அங்குவைத்து கைது செய்துள்ளனர்.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க