வடக்கு மாகாண பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் தொழிற்சந்தை வழி காட்டல் கண்காட்சி

-யாழ் நிருபர்-

வடக்கு மாகாண பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் தொழில் வாய்ப்புக்கான கற்கையினை நிறைவு செய்தவர்களுக்கான தொழிற்சந்தை வழி காட்டல் கண்காட்சி இன்று இரண்டாவது நாளாகவும் யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் (Jaffna Cultural Centre), வடமாகாண பிரதம செயலகத்தில் பிரதிப்பணிப்பாளர் எஸ்.கிருபாகரன் தலைமையில் நடைபெற்றது.

இங்கு தொழில் வழிகாட்டிக்கான கருத்தரங்குகள் தொழில்வாய்ப்புக்கான வேலைகள், மூதலீட்டிலான தொழில்முனைவருக்கு தொழிற்துறைகள் சுயதொழிலுக்கான சான்றீதழ்களை பெற்றுக்கொண்ட வர்களுக்கு தொழித்துறையிலான சந்தர்ப்பங்களை வழங்கல்,முயற்சியாளர்களுக்கான சந்தைவாய்ப்பினை வழங்கல் பற்றி 60 கண்காட்சி கூடார தொகுதிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் 100க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள், தொழில் துறையினை ஏதிர்பார்ப்பவர்கள், தொழிலில் பயிற்சிகள் பெறுனர் என பலரும் கலந்துகொண்டனர்.