வடக்கு கிழக்கு மாகாணத்தில் 22 இலட்சத்து 20311 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்

-செ.துஜியந்தன்-

ஜனாதிபதி தேர்தலில் 2024 தேர்தல் வாக்காளர் இடாப்பின்படி வடக்கு கிழக்கு மாகாணத்தில் இருந்து 22 இலட்சத்து 20311 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இதற்கமைய கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 இலட்சத்து 49686 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 5 இலட்சத்து 55432 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 3 இலட்சத்து 15925 பேரும் வாக்களிக்கத்தகுதி பெற்றுள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் யாழ் மாவட்டம் 492280 பேரும் , கிளிநொச்சி மாவட்டத்தில் 100907 பேரும், வவுனியாவில் 128585 பேரும், மன்னார் 90607 பேரும், முல்லைத்தீவு 86889 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.