லொறி – முச்சக்கரவண்டி விபத்து : இருவர் படுகாயம்

-நுவரெலியா நிருபர்-

ஹைபொரஸ்ட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருந்து ஓயா பகுதியில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளதாக ஹைபொரஸ்ட் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் குருந்து ஓயாவில் இருந்து இராகலை நோக்கி பயணித்த மரக்கறி போக்குவரத்து லொறி எதிர்திசையில் வந்த முச்சக்கரவண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவரும், லொறியில் பயணித்த ஒருவரும் படுகாயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஹைபொரஸ்ட் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.