ரயிலில் முச்சக்கரவண்டி மோதி விபத்து: இருவர் பலி

வெலிகம பெலென பகுதியிலுள்ள ரயில் கடவையொன்றில் முச்சக்கர வண்டியொன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். மூவர் காயமடைந்து மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முச்சக்கரவண்டியில் தாயுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளும், இராணுவத்தில் கடமையாற்றி விடுமுறையில் வந்திருந்த மற்றுமொரு உறவினரும் பயணித்துள்ளனர்.

 

முச்சக்கரவண்டியை ஓட்டிச் சென்ற 32 வயதுடைய உறவினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், பலத்த காயமடைந்த 9 வயது சிறுவன் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

ஏனைய இரண்டு பிள்ளைகளும், தாயும் சிகிச்சைக்காக மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் வெலிகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்