யாழ் இந்திய துணைத் தூதுவருக்கும் விமானப்படையின் கட்டளை தளபதிக்குமான சந்திப்பு

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் சாய் முரளிக்கும், யாழ்ப்பாண விமானப்படையின் கட்டளை தளபதி குரூப் கப்டன் சமிந்த ஹேரத் இடையிலான சந்திப்பு ஒன்று யாழ்ப்பாணம் மருதடி வீதியில் உள்ள யாழ்ப்பாண இந்திய துணைத்தூதரக அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

இதில் யாழ்ப்பாண விமானப்படையின் தற்போதைய நிலைமைகள் மற்றும் பொதுமக்களுக்கு செயலாற்றக்கூடிய வகையிலான உதவித்திட்டங்கள், பரஸ்பர உதவித்திட்டங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டன.

இந் நிகழ்வில் யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் அதிகாரி ராம் மகேஸ் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.