மோட்டார் சைக்கிள் குளத்தில் வீழ்ந்து மாணவர்கள் இருவர் பலி

நால்வர் பயணித்த மோட்டார் சைக்கிள் குளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
தம்புள்ளை – வேமதில்ல பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நால்வர் இணைந்து பயணித்த மோட்டார் சைக்கிளின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் கலேவெல, புவக்பிட்டிய, நபடகஹாவத்த பகுதியைச் சேர்ந்த பிசுல் ஹபீக் ஹம்னிதாஸ் (வயது – 16) மற்றும் நவ்சாத் அலி முசாபிக் (வயது – 16) ஆகியோரே உயிரிழந்துள்ளதாகத் பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றைய இருவர் படுகாயமடைந்து தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.