முற்றாக தீப்பிடித்து எரிந்த கார்

பாணந்துறை – வாதுவை, பொத்துப்பிட்டிய காலி வீதி பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் பகல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் தீப்பிடித்து முற்றாக எரிந்துள்ளது.

களுத்துறை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவைச் சேர்ந்த தீயணைப்பு வீர்ரகள் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

காரில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.எனினும் உயிர் சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.