முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்கும் வகையில் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுத்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

1994 முதல் 2005 வரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக கடமையாற்றிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தாக்கல் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.