மாலைதீவிலிருந்து இன்று வந்தடையவுள்ள எரிவாயு கப்பல்

கப்பலில் இருந்து எரிவாயுவை இறக்கும் பணிகள் இன்று சனிக்கிழமை இரவு 7 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் துஷார ஜயசிங்க தெரிவித்தார்.

மாலைதீவில் இருந்து 3,900 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிக்கொண்டு கப்பலொன்று இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது நாளொன்றுக்கு சுமார் 100,000 எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு வெளியிடுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.