மன்னாரில் அரசிற்கு எதிராக மாபெரும் ஜனநாயக போராட்டத்திற்கு அழைப்பு

-மன்னார் நிருபர்-

தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் எதிர் வரும் வியாழக்கிழமை  காலை 9 மணிக்கு மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அரசிற்கு எதிராக இடம் பெறவுள்ள சனநாயக போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அரசின் தூர நோக்கற்ற நிதி நிர்வாக முகாமைத்துவத்தால் நாடு பெரும் பொருளாதார பின்னடைவை எதிர் நோக்கி பட்டினிச்சாவை நோக்கி நகர்கின்றது.

குறிப்பாக அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் மற்றும் மின்சாரம் இன்றி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே இச் செயலைக் கண்டித்து தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் எதிர் வரும் வியாழக்கிழமை  காலை 9 மணிக்கு மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இடம் பெற உள்ள மாபெரும் கண்டன போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொண்டு தமது உணர்வுகளை வெளிப்படுத்த அணி திரளுமாறு தமிழ்த்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் அழைப்பு விடுத்துள்ளார்.