மட்டு குருக்கள்மடம் ஏத்தாலைக்குளம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வலயமாக பிரகடனம்

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட குருக்கள்மடம் கிராமத்தில் ஏத்தாலைக்குளம் பாதுகாக்கப்பட்ட பறவைகள் சரணாலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை.உத்தியோகபூர்வமாக  அங்குரார்ப்பணம்  செய்தல் நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை குருக்கள்மடம் ஐயனார் ஆலய முன்றலில் நடைபெற உள்ளது
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி முரளிதரன் , மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் மற்றும்  பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந் நிகழ்விற்கு  கிராம பொதுமக்கள், நலன்விரும்பிகள், ஆலய ,சங்க பிரதிநிதிகள், விளையாட்டு கழகங்கள் அனைவரையும் தவறாமல் கலந்து சிறப்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.