மட்டக்களப்பில் 100 குடும்பங்களுக்கு காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கி வைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் 100 குடும்பங்களுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் காணி உறுதிப் பத்திரங்கள் இன்று செவ்வாய்க்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.

காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்,பிரதேச செயலாளர்,உட்பட அரச அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்