மகளை 3 வருடங்களாக துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்த தந்தை கைது

பொத்துவில் பிரதேசத்தில் தனது மகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்து வந்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

 

தேசிய சிறுவர் பாதுகாப்பு சபையின் அவசர பிரிவான 1929 தொலைபேசி இலக்கத்திற்கு குறித்த சிறுமி வழங்கிய முறைப்பாட்டுக்கமைய 38 வயதுடைய பொலிஸ் சிவில் பாதுகாப்பு உத்தியோகராக கடைமையாற்றிவரும் சிறுமியின் தந்தை இன்று புதன்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார்

குறித்த 14 வயது சிறுமியை அவரது தந்தை கடந்த 3 வருடங்களாக பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டுவந்ததாக சிறுமி தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்