போதைப்பொருளுடன் இளைஞன் கைது!

-சம்மாந்துறை நிருபர்-

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செலான் வங்கி வீதியில், ஹெரோயின் போதைப் பொருளுடன், நேற்று வியாழக்கிழமை இரவு 11.30 மணியளவில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்மாந்துறை பெருங்குற்றப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத்தகவலின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது, சம்மாந்துறை 11 பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இவ்வாறு கைதான சந்தேக நபரிடமிருந்து, 1900 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டிருந்ததுடன், சந்தேக நபர் உள்ளிட்ட சான்றுப்பொருட்கள் என்பன சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.

அத்துடன், ,சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலதின் வழிகாட்டுதலில், பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான பொலிஸ் உத்தியோகத்தர்களான, யேகான், நிரஞ்சன் உள்ளிட்ட அதிகாரிகள் இச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்

மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.