பெண் பொலிஸ் உத்தியோகத்தர் பாலியல் வன்கொடுமை: 19 வயது இளைஞன் கைது

இரத்தினபுரி பகுதியில் பெண் பொலிஸ் உத்தியோகத்தரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த 19 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பொதுப் போக்குவரத்து சேவைகளில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் மற்றும் துன்புறுத்தல்களை தடுக்கும் வகையில் பணிகளை மேற்கொண்டிருந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை கொழும்பு மேலதிக நீதிவான் கெமிந்த பெரேரா முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.