பூனம் பாண்டேவுக்கு 5 ஆண்டுகள் சிறை ?

நடிகை பூனம் பாண்டேவுக்கு தவறான தகவல் பரப்பிய குற்றச்சாட்டில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நடிகை பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக காலமானதாக கடந்த 2 நாட்களுக்கு முன் செய்திகள் வெளியாகின. அதனை தொடர்ந்து பூனம் பாண்டே தனது இன்ஸ்டா பக்கத்தில் தான் உயிருடன் இருப்பதாகவும், கர்ப்பப்பை வாய் புற்று நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த செய்தியை வெளியிட்டதாகவும் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

இந்த வீடியோவிற்கு சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் வெளியாகின. நோய்க்குரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இவ்வாறு பொய் சொல்வது மட்டமான செயல் . சுய விளம்பரத்திற்காக செய்யும் பைத்தியக்காரத்தனம் எனவும் நெட்டிசன்கள் விமர்சனம் செய்தனர்.

2000ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவின் சட்டப்படி சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பினால் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் . அதே தவறை திரும்ப செய்தால் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சமூக வலைதளத்தில் தகவல் பரப்பிய பூனம் பாண்டே மீது சமூக ஆர்வலர்கள் வழக்கு தொடர்ந்தால் அவருக்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கலாம் எனத் தெரிகிறது.