பிம்ஸ்டெக் மாநாட்டில் ஜனாதிபதியின் உரை இன்று

கொழும்பில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் பிம்ஸ்டெக் மாநாட்டின் மூன்றாம் நாளான இன்று புதன்கிழமை காலை 9 மணிக்கு பிம்ஸ்ரெக் அமைப்பின் 5ஆவது அரசதலைவர்கள் மாநாடு நடைபெறவிருப்பதுடன் இதில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மெய்நிகர் வழியே உரை நிகழ்த்துவார்.

அதனைத்தொடர்ந்து உறுப்பு நாடுகளின் அரசதலைவர்களும் மெய்நிகர் வழியில் உரையாற்றுவர். அத்தோடு இம்மாநாட்டில் பிம்ஸ்ரெக் சாசனம் ஏற்கப்பட்டு, பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவுள்ளது.

பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரி குடா முன்முயற்சியின் (பிம்ஸ் ரெக்) 5ஆவது மாநாட்டின் இரண்டாம்நாள் நிகழ்வான அமைச்சர் மட்டக்கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் அமைந்துள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், பூட்டான், தாய்லாந்து மற்றும் மியன்மார் ஆகிய 7 நாடுகள் அங்கம்வகிக்கும் இந்த பிம்ஸ்ரெக் அமைப்பின் 5ஆவது மாநாடு நேற்று முன்தினம் திங்கட்கிழமை ஆரம்பமான நிலையில், மாநாட்டின் இரண்டாவது நாளான நேற்று நடைபெற்ற 18 ஆவது அமைச்சு மட்டக்கூட்டத்தில் உறுப்புநாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி வெளிவிவகார அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

இதன்படி பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, நேபாளம், தாய்லாந்து ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்க ளான (முறையே) கலாநிதி ஏ. கே.அப்துல் மொமென், கலாநிதி தன்டி டோர்ஜி, கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், கலாநிதி நாராயண் கட்கா, டொன்ப்ரமுத் வினை ஆகியோர் மாநாட்டில் பங்கேற்றிருந்தனர். அத்துடன், மியன்மார் சார்பில் அந்நாட்டின் இலங்கைக்கான தூதுவர் கலந்துகொண்டிருந்தார்.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸின் உரையுடன் இந்த மாநாடு ஆரம்பமானது. அத னைத்தொடர்ந்து ஏனைய உறுப்புநாடுகளின் வெளிவிவ கார அமைச்சர்களின் உரைக ளும் இடம்பெறவிருந்த போதிலும், அமைச்சர் பீரிஸின் உரையைப் பார்வையிடுவதற்கு மாத்திரமே ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.