பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

தம்புள்ளை – இப்பன்கட்டுவ நீர்த்தேக்கத்தில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் பாதுகாப்பற்ற இடத்தில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான்.

காலி – ஹல்வித்திகல பகுதியில் வசிக்கும் 16 வயதுடைய பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

குறித்த மாணவன் நீராடச் சென்ற நிலையில் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். இதன்போது தம்புள்ளை பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினர் மேற்கொண்ட தேடுதலின் போதே குறித்த மாணவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அவர் தனது பாட்டி மற்றும் சகோதரருடன் அநுராதபுரத்திற்கு புனித யாத்திரை மேற்கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைகளின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.