நாயுடனும் ஆர்ப்பாட்டங்கள்

கொழும்பு உட்பட நாடளாவிய ரீதியில் பல பிரதேசங்களில், அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இரவு ​வேலையிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

பல பிரதேசங்களில் மின்வெட்டு அமுலில் இருக்கிறது.  ​கொழும்பு, கொட்டாஞ்​சேனையில் சில பிரிவுகளில் மின்வெட்டு அமுலில் இருக்கிறது. அந்த பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் வீதிக்கு இறங்கிவிட்டனர்.  இருட்டிலும் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

இதேவேளை, ராஜகிரிய பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் நாயுடன் மக்கள் கலந்துகொண்டனர். நாயின் கழுத்தில் பதாகையும் கொழுவப்பட்டுள்ளது.