புகையிரத்தில் மோதி குடும்பஸ்தர் பலி

நானுஓயாவில் புகையிரத்தில் மோதி குடும்பஸ்தர் ஒருவர் பலி

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி இன்று வியாழக்கிழமை விடியற்காலையில் புறப்பட்ட ரயிலில் மோதி குடும்பஸ்தர்  ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த நபர் நானுஓயா கிலோசோ தோட்டத்தை சேர்ந்த  மூன்று பிள்ளைகளின் தந்தையான செல்லதுரை சிரிதரன் (44 வயது) என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சடலம் மீட்கப்பட்டு தற்போது நானுஓயா புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனைக்காக சடலம் நுவரெலியா ஆதார வைத்தியசாலைக்கு அனுப்ப உள்ளதுடன், மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்