நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு இல்லை

அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சியால்  கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானம் எடுத்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அறிவித்துள்ளது.

இது தொடர்பில் ட்விட்டர் பதிவொன்றை விடுத்துள்ள இ.தொ.க. கட்சியின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான இதனைத் தெரிவித்துள்ளார்.

விரிவான கலந்துரையாடலின் பின்னர் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி மற்றும் சுயாதீனமாக இயங்கும் கட்சி தலைவர்களுக்கு குறித்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.