துணிகளை உலர வைக்க சென்ற பெண் பரிதாபமாக உயிரிழப்பு

மாத்தறை பிரதேசத்தில் வீட்டின் கொங்கிரீட் கூரையில் ஏற முற்பட்ட பெண் தவறி கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

மாத்தறை பிரதேசத்தை சேர்ந்த 58 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் வீட்டில் யாரும் இல்லாத போது துவைத்த துணிகளை வெயிலில் உலரவைப்பதற்காக வீட்டின் கொங்கிரீட் கூரையில் ஏற முற்பட்ட போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து உயிரிழந்தவரின் மருமகள்,பிரதேசவாசிகளின் உதவியுடன் காயமடைந்தவரை மாத்தறை தேசிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ள நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.