தீடிரென தீப்பற்றிய சுற்றுலா பேருந்து

கொழும்பிற்கு சுற்றுலா சென்ற தனியார் பேருந்து இன்றையதினம் புதன் கிழமை அதிகாலை திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக தெரியவருகின்றது.

குறித்த பேருந்தின் சாரதி மற்றும் உதவியாளர் ஆகிய இருவரும் வீதியில் பேருந்தினை நிறுத்தி விட்டு தேநீர் அருந்த சென்ற போதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கண்டி நோக்கிச் சென்ற சுற்றுலா பேருந்தே இவ்வாறு தீப்பற்றி எரிந்துள்ளதாகவும், இதன்போது பேருந்தில் யாரும் இருக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொட்டாஞ்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.